search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் தாலுகா போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் 5-ந் தேதி ஏலம்
    X

    உரிமை கோரப்படாத வாகனங்களை படத்தில் காணலாம்.

    தாராபுரம் தாலுகா போலீஸ் நிலையங்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் 5-ந் தேதி ஏலம்

    • காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
    • டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :- வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற 5-ந் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.

    தாராபுரம் போலீஸ் நிலையத்தில் 6, அலங்கியம் போலீஸ் நிலையத்தில் 26, குண்டடம் போலீஸ் நிலையத்தில் 20, மூலனூர் போலீஸ் நிலையத்தில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×