என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பயணியிடம் செல்போன் பறிப்பு - வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
- மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த விஜய்,பிரவீன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் கர்நாடகா எண் கொண்ட திருட்டு வாகனம் என தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விஜய்,பிரவீன் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வேறு கொள்ளையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செல்போனை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்