என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் வழியாக இயக்கப்படும் கோவை-திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்
- 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
- இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
கோவை-திருப்பதி ரெயில் சேவை பொறியியல் பணி காரணமாக நாளை 29-ந் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. நாளை 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
காட்பாடியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படாது. இதுபோல் திருப்பதி-கோவை ரெயில் நாளை 29-ந் தேதி காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி-காட்பாடி வரை இயக்கப்படாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story






