search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுதாய வளைகாப்பு விழா
    X

    சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    சமுதாய வளைகாப்பு விழா

    • 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், 3வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, 35 -வது வார்டு கவுன்சிலர் முத்துகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், திலகராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×