என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தக்காளி விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி
- 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.
- 14 கிலோ கொண்ட பெட்டி 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.கேரள மாநிலம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.இதனால், சந்தைக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தக்காளி பெட்டி வரத்து காணப்படுகிறது. நடப்பு சீசனில், படிப்படியாக அதிகரித்து 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி, கடந்த மாதம் 300 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது 40 முதல் 70 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி சாகுபடிக்கு 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. கடும் வறட்சி, திடீர் மழை காரணமாக நடப்பாண்டு மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. பறிப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன் என பெட்டிக்கு 30 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ 2 முதல் 5 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் நடப்பு சீசன் தக்காளி சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.






