என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அவினாசியில் பலத்த மழை வீடு இடிந்து மூதாட்டி உள்பட 3பேர் காயம்
- அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.
- பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அவினாசி :
திருப்பூர்மாவட்டம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவினாசியை அடுத்து சேவூர் பாலிக்காடு பகுதியை சேர்ந்த பழனிசாமி- கலா தம்பதியினர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இன்றுஅதிகாலை நேரத்தில் திடீரென அடுத்தடுத்து 2 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் பழனிசாமி மற்றும் கலா ஆகியோர் லேசான காயமடைந்தனர் .கலாவின் தாயார் மாகாளி(வயது 70) மீது சுவர் இடிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்