என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
- கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்.பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி.பரமசிவம்,எம்.கே.ஆறுமுகம்,ஜெயந்தி லோகநாதன், ஐ.டி. விங்க் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் சொக்கப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சுமார் 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேலைகள்,இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் குலாப்ஜான்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம், அரிகோபால்,பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் பானு பழனிசாமி ,தண்ணீர் பந்தல் நடராஜன்,பிரேமா , பழனிசாமி, ஐ.டி.விங்க் மிருதுளா நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்