search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரடிவாவி ஊராட்சிக்கு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் -  கலெக்டரிடம்  தலைவர் மனு
    X

     ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன்.

    கரடிவாவி ஊராட்சிக்கு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் - கலெக்டரிடம் தலைவர் மனு

    • பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரடிவாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்துகொண்டு ரூ.41.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சியில் சுமார் 4000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி1.35 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 4 லட்சம் லிட்டராக அதிகப்படுத்தி வழங்க வேண்டும். மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு கரடிவாவி ஸ்ரீநகர் பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கவேண்டும். அதே போல குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். பள்ளி நேரங்களில் மாணவ, மாணவியருக்கு போதுமான பஸ் வசதி இல்லை. எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும். மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×