search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் களை கட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் களை கட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    • தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
    • பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.

    திருப்பூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகை கிறிஸ்துமஸ்.அவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள். அன்பு, பகிர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை போதிக்கும் இவ்விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே தேவாலயங்கள் சார்பில் வீடுகள்தோறும் சென்று கிறிஸ்துமஸ் பூபாளம் பாடி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வை காட்சிப்படுத்தும் வகையில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்டார்களும் தொங்கவிடப்பட்டு அவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும் புத்தாடை எடுத்தும் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் . தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியும், சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நாளை 25-ந் தேதி அதிகாலை 5மணிக்கு ஆராதனையும் நடக்கிறது.

    இதில் உறவினர்கள், நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, பரஸ்பரம் கேக் உள்ளிட்ட இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். மேலும் நாளை தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்க உள்ளனர்.

    இது குறித்து பேராயர்கள் கூறுகையில், உலகில், தீயவை ஒழிந்து நன்மை பெருக வேண்டும் என்பதற்காகவே ஏசு கிறிஸ்து மண்ணில் அவதரித்தார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். அதை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து பிறப்பின் போது பிறருக்கு உதவும் செயல் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் சமயத்தில் மெழுவர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி ஆராதனை செய்வது வழக்கம். இது நாம் பிறருக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றனர்.

    திருப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனால் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் ,அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடித்தன. கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகளும் விற்பனை ஆகின. பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.மேலும் பேக்கரி கடைகளில் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதனால் பேக்கரி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது. திருப்பூர் காங்கயம் சாலையில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ்சையொட்டி இங்குள்ள கடைகளில் அதிக அளவு பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையால் திருப்பூர் மாவட்டம் களை கட்டி காணப்படுகிறது.

    Next Story
    ×