search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிநீரில் புழுக்கள்-  பொதுமக்கள் அதிர்ச்சி
    X
    குடிநீரில் புழுக்கள் இருப்பதை படத்தில் காணலாம். 

    குடிநீரில் புழுக்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி

    • குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம்.
    • நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர். இந்த நிலையில், குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் 7 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாது. குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம். இப்போது குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×