search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி - கோவில்வழி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்
    X

    மறியலில் ஈடுபட்ட பயணிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

    தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரி - கோவில்வழி பஸ் நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்

    • கோயில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர்.
    • சிறப்பு பேருந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால் பஸ் இயக்குவது நிறுத்தப்படு கிறது. வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் முயல்வதால் அனைத்து பஸ்களும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமா னோர் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் குவிந்தனர். போக்குவரத்து அதிகாரிகள் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கிவந்தனர். இந்தநிலையில் நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்கோவில், மேட்டுப்பாளையம் வனப த்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோயி ல்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்ல குவிந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கோவிலுக்கு சிறப்பு பேரு ந்துகளாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்தனர். இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில்வழி பஸ் நிலையத்தில் தென் மா வட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பஸ் இல்லாமல் காத்திரு க்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பஸ் வசதி செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். இதனை யடுத்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தென் மாவட்டங்களுக்கு முக்கியமான நாட்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என ெதன் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×