என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோடை வெப்பத்தை தணித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது.
- 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது.
திருப்பூர் :
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது. வெப்பதாக்கம் அதிகம் இருந்த போது சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. குறிப்பாக 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது. நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் மாலை 5:30 மணி முதல், 6:15 மணி வரை மழை பெய்தது. திடீரென கனமழை பெய்ததால் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப்., பாலம், ஒற்றைக்கண் பாலம் பகுதியில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது.
இதேபோல் யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் ரோடு சந்திப்பில், குழி வெட்டியுள்ள இடங்களில் கழிவுநீர் பாய்ந்தோடியது. ஈஸ்வரன் கோவில் வீதி பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதே போல் நகரின் பல பகுதிகளில் மழைநீர் ஓடைபோல் ஓடியது. திடீரென கோடை மழை பெய்தது சற்று இடையூறாக இருந்தாலும், மழை நின்றதும், இயல்பு நிலை திரும்பியது.குளுகுளு மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்