search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
    X

    உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கலெக்டர் காசோலை வழங்கிய காட்சி

    கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

    • நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
    • மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் , செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நான்கு குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×