search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு
    X

    கோப்புபடம்.

    தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

    • மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    • தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர் :

    தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம், திருப்பூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி அருள்அரசு கூறியதாவது :- திருப்பூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது. கடந்த, 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023 - டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடக்கிறது.இதில் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×