search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?
    X

    கோப்புபடம்.

    உடுமலை குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை குட்டைத்திடல் பகுதியில், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான குட்டைத்திடல் பகுதி போதிய பராமரிப்பு இன்றி அமைந்துள்ளதால் குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் நாராயண கவி மணி மண்டம், காந்திசிலை, முதற்கிளை நூலகம் அமைந்துள்ள நிலையில் இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே, குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×