என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் - கோவில்களில் சிறப்பு வழிப்பாடு
    X

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த காட்சி.

    ஆடி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் - கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

    • திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது
    • பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.

    திருப்பூர்:

    மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் இன்று மாதம் தொடங்கியது.இதையொட்டி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட உள்ளது.

    சேவூர் அழகு நாச்சியம்மன் என்ற பத்ரகாளியம்மன் மற்றும் காமராஜ் நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில்களில் த்திருவிழா இன்று தொடங்கியது. மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு திரவியஅபிஷேக ஆராதனைகளும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து வாரந்தோறும் உபயதாரர்களால் கூழ் ஊற்றுதல் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இன்று அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு, கிருத்திகை, பவுர்ணமி, பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்டு 11-ந்தேதி) காலை 10 மணிக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். அதை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக மாத வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சிறப்பு பஸ் இயக்க முடிவு செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று மாத முதல் அமாவாசையையொட்டி தாராபுரம் அமராவதி ஆறு மற்றும் உடுமலையில் நீர்நிலைகளில் பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    Next Story
    ×