என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் தமிழகம் வருகிறார்
    X

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்

    மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் தமிழகம் வருகிறார்

    • பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜூன் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
    • தாம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    சென்னை:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் (ஜூன் 20-ம் தேதி) சென்னை வர உள்ளார்.

    ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத்சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.

    Next Story
    ×