search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி திருவிழா
    X

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி திருவிழா

    • பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
    • திடீரென கனமழை பெய்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம்.

    அதாவது அப்பருக்கு சிவபெருமான் கயிலை காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று இரவு ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மதியம் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.

    தொடர்ந்து, இரவில் ஐயாறப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது.

    இதற்காக ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பருக்கு காட்சி கொடுத்தார். அப்போது திடீரென கனமழை பெய்தது.

    இருந்தாலும் கொட்டு மழையையும் பக்தர்கள் பொருட்படுத்தாமல் பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்து தேவார பாடல்களை பாடி உற்சாகமடைந்தனர். கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆலோசனைபடி கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×