search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு
    X

     சிக்கார்தனஅள்ளி கரக செல்லியம்மன் கோவில் நிலம் அளவிடு செய்வதை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததலால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    கோவில் நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு ஏற்பட்ட பின் நிலஅளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாததால் கோவில் சிதிலமடைந்தும் பராமரிப்பு இன்றி காணப்பட்டு வருகிறது.

    கோவில் நிலத்தில் இருந்து வரும் வருமானத்தை கொண்டு கோவில் பூஜை, திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகளை செய்ய முன்னோர்கள் கோவில் நிலத்தை ஒதுக்கி தந்தனர் , ஆனால் கோவில் நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் சொந்த பயன்பாட்டிற்கே பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமாக 32 ஏக்கர் நிலத்தை பொது ஏலம் விட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று 8 ஏக்கர் நிலத்தை மட்டும் நிலஅளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற சிக்கார்தானஅள்ளி கிராமத்திற்க்கு இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி யடைந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நிலஅளவீடு செய்வதாக இருந்தால் 32 ஏக்கர் மொத்த நிலத்தையும் அளவீடு செய்து முறையாக பொது ஏலம் விட வேண்டும், ஒரு பகுதி மட்டும் அளவீடு செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கூச்சல் குழப்பம் நிலவியது.

    இதையடுத்து பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வு ஏற்பட்ட பின் நிலஅளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

    இதனை ஏற்று அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரும்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×