search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகாசியில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பு:அதிகாரிகள் நடவடிக்கை
    X

    சிவகாசியில் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பு:அதிகாரிகள் நடவடிக்கை

    • ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதாக கருதி கடந்த மார்ச் 1-ந்தேதி தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் வேறு ஆலைகளுக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் ஆலை செயல்படுவது போல் தினமும் பலர் அந்த ஆலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோத மாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில் தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆலையில் அதிரடியாக ஆய்வு செய்த னர்.

    இந்த ஆய்வில் 50 தொழி லாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறி யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலையை பூட்டி வருவாய்த் துறையினர் 'சீல்' வைத்தனர். மேலும் மாரனேரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய பயிற்சி பெற்ற போர்மேன்களை மட்டுமே பணியில் அமர்த்தி உரிய விதிமுறைகளை பின்பற்றி அவரது மேற்பார்வையில் மருந்து கலவை செய்ய வேண்டும் என்று கலெக்டர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இதில் முரண்பாடு இருந்தால் ஆலை மீதும், அந்த போர்மேன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் விதிகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×