search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷச்சாராய சாவு: நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார்-செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
    X

    விஷச்சாராய சாவு: நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார்-செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    • சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவுகள் தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும் போது விஷச் சாராயம் எப்படி கிடைக்கிறது? எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

    அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள மந்திரி இதை அரசியல் ஆக்காமல் இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்.

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலை யில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அது எடுபடாது.

    நடிகர் கமல் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.

    ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×