search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலைப்பாதையில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
    X

    ஏற்காடு மலைப்பாதையில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

    • சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.
    • மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்காக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை 3.30 மணி வரை சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது. ஏற்காடு ஒண்டிக்கடை பஸ் நிலையம், டவுன், செங்காடு, மஞ்சகுட்டை, வாழவந்தி, கொம்பக்காடு, நாகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கன மழை கொட்டியது.

    மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கன மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இதே போல டேனீஸ்பேட்டை, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஆனைமடுவு, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது . சேலம் மாநகரில் நேற்று 3 மணியளவில் தொடங்கிய மழை லேசான தூறலுடன் நின்று போனது. இதனால் சேலம் மாநகர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 17 மி.மீ.மழை பெய்துள்ளது. சேலம் 0.6, வாழப்பாடி 3, ஆனைமடுவு 1, ஆத்தூர் 1, தம்மம்பட்டி 9, சங்ககிரி 2.3, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 14 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 51.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×