என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயிலில் வாட்ஸ்அப் இ-டிக்கெட் அறிமுகம்
- மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் கேட்டுகள் வழியாக வாட்ஸ்அப் டிக்கெட்களை காண்பித்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் செல்லலாம்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் டிக்கெட், கவுண்டர்களில் வழங்கப்படுகிறது. எந்திரத்திலும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. மேலும் டிக்கெட் அட்டை பெற்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் எண்ணுக்கு பயணிகள் தகவல் அனுப்பினால் அவர்களுக்கு பயண விருப்பங்கள் வழங்கப்படும். புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்த பிறகு பணம் செலுத்துவதற்கான வழிமுறை வரும் அதன்பிறகு டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரெயில் கேட்டுகள் வழியாக வாட்ஸ்அப் டிக்கெட்களை காண்பித்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் செல்லலாம். இந்த வாட்ஸ்-அப் எண், ரெயில் நிலையங்கள், ரெயில்கள் மற்றும் சமூக ஊடகங்களில் விரைவில் விளம்பரப்படுத்தப்படும்.






