search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு நீர்வீழ்ச்சியில் சிக்கிய 3 பேர்- மீட்பு பணி தீவிரம்
    X

    நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு நீர்வீழ்ச்சியில் சிக்கிய 3 பேர்- மீட்பு பணி தீவிரம்

    • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
    • வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி வந்த 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    முண்டகையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூஜிப்பாறை நீர்வீழ்த்தி உள்ளது.

    இங்குள்ள பாறைகளின் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.

    வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.

    மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்துள்ளனர்.

    Next Story
    ×