search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மணிப்பூரில் ஊடுருவிய 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - முதல் மந்திரி பேட்டி
    X

    முதல் மந்திரி பிரேன் சிங்

    மணிப்பூரில் ஊடுருவிய 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - முதல் மந்திரி பேட்டி

    • மணிப்பூரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    இம்பால்:

    மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங், இம்பால் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய நபர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, இந்திய ராணுவம் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. மக்கள் சமூகத்தினர் இடையே இல்லை. அதனால், மக்கள் அமைதி காக்க வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்காக ஹெலிகாப்டர் உதவியுடன் வான்வழி கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×