என் மலர்
இந்தியா
பைக் சாகசத்தால் பறிபோன 5 உயிர்கள்.. மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் வழியில் நடந்த சோகம்
- மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள்.
- விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
உத்தரப் பிரதேசம் பிராயக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு காரில் திரும்பிய நேபாளத்தைச் சேர்ந்த 5 பேரின் உயிரை பைக் ஸ்டண்ட் பறித்துள்ளது.
நேற்று, பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 9 பேருடன் கார் வந்துகொடுந்தபோது சிலர் பைக்கர்கள் ஸ்டண்ட் செய்துகொண்டிருந்தனர்.
இதனால் பைக் மீது இடிக்காமல் இருக்க காரை டிரைவர் திருப்பியுள்ளார். இதில் கார் தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் மூன்று பெண்கள் உட்பட 5 நேபாள நாட்டவர்கள் பலியானார்கள். இறந்தவர்கள் அர்ச்சனா தாக்கூர், இந்து தேவி, மந்தர்னி தேவி, பால் கிருஷ்ண ஜா மற்றும் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
VIDEO | One dead and five injured after a vehicle carrying devotees overturns in Maihar while returning from Maha Kumbh. More details awaited. (Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/SUa8QlMcIe
— Press Trust of India (@PTI_News) February 2, 2025
மீதமுள்ள நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.