என் மலர்tooltip icon

    பீகார்

    • வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    நான் மதம், சாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதசாரபற்ற நிலைக்கு இதுவே சான்று.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு 44 பரிந்துரைகளை முன்வைத்தது. இறுதியாக பாராளுமன்ற நிலைக்குழு அதை 23 ஆக குறைந்தது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை 14 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது. இது மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிராக குறிவைக்கப்படுகிறது. பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக அவர் சமூகத்தை பிளவுப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    அவர்கள் எப்போதும் சமூகத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இதை புரிந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    • மேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
    • ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.

    பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.

    • சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அகம்குவான் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக சுரபி ராஜ் (வயது 33) இருந்தார். நேற்று அவர் மருத்துவமனையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.

    அப்போது நோயாளியின் உறவினர்கள் போல வந்த ஒரு கும்பல் திடீரென சுரபி ராஜ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுரபி ராஜ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் சுரபி ராஜின் அறைக்கு சென்றபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது கைகள், முகம் மற்றும் மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து 6 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அதே போல துப்பாக்கி சூடு நடந்த போதும் பெரிய அளவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமெரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரபி ராஜ் பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு முஸ்லீம் அமைப்பிற்கு அழைப்பு.
    • நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விடுத்த இஃப்தார் அழைப்பை அம்மாநிலத்தின் பிரதான முஸ்லீம் அமைப்பு நிராகரித்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து முஸ்லீம் அமைப்பு இஃப்தார் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

    இமாரத் ஷரியா என்ற முஸ்லீம் அமைப்பு பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா முழுக்க ஆதரவாளர்களை கொண்டிருக்கிறது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இமாரத் ஷரியா அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த அழைப்புக்கு பதிலளித்த இமாரத் ஷரியா, "மார்ச் 23ம் தேதி நடைபெறும் அரசு இஃப்தாரில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளும் வக்பு வாரிய மசோதாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

    "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற (தர்ம-நிரபெக்ஷ்) ஆட்சியை உறுதியளித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் பாஜகவுடனான உங்கள் கூட்டணியும், அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு உங்கள் ஆதரவும், நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது," என தெரிவித்துள்ளது.

    • நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
    • அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை பீகார் சட்டமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அவை தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி விலக வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவையின் செயல்பாடுகள் பத்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

    அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததை அடுத்து சட்டசபை கூடிய எட்டு நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. எனினும், சபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சியினர் முகப்பு பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.


    பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பீகாரில் சட்டசபை நடவடிக்கைகள் முதல் பாதி வரை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இது குறித்து அம்மமாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அவையில் கூறும் போது, நாங்கள் தனிப்பட்ட முறையில் முதலமைச்சரை மதிக்கிறோம், ஆனால் யாராவது தேசிய கீதத்தை அவமதித்தால், இந்துஸ்தான் எந்த விலையிலும் அதை பொறுத்துக்கொள்ளாது," என்றார்.

    அப்போது குறுக்கிட்ட சட்டப்பேரவை சபாநாயகர், "பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படும்," என்று கூறினார். தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேச நேரம் கோரினார். ஆனால் சபாநாயகர் நேரம் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் கூச்சலிடத் தொடங்கினர்.

    தொடர்ந்து அவையை நடத்த முற்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்ததை அடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

    • விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார்.
    • விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவின் வீட்டில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் இரண்டு மருமகன்களான ஜெய் ஜித் யாதவ் மற்றும் விஸ்வஜித் யாதவ் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு கொலையில் முடிந்துள்ளது.

    இதில், விஸ்வஜித் வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து ஜெய் ஜித்தை நோக்கி சுட்டார். விகல் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    ஜெய்ஜித் ஆபத்தான நிலையில் பாகல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
    • அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.

    அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக  நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.

    கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி,  குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
    • நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.

    பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.

    நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.

    அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
    • நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்

    பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.

    பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.

    "பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.

    மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.

    நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    • நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
    • ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நகைக்கடை ஒன்றில் இன்று சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    நகைக்கடை இன்று வழக்கம்போல் காலை கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென 6க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர்.

    கெள்ளையர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், துப்பாக்கி காட்டி ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதில், கெள்ளையர்கள் 6 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிககளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதற்கிடையே, தப்பியோடிய மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

    ஹோலி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டு மாலை 6 மணிக்குப் பிறகு நோன்பு திறப்பார்கள். ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அவர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள்.

    ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால், இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாகூர் பசாயுல் (Haribhushan Thakur Bachaul) இது தொடர்பாக கூறியதாவது:-

    வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது. அதில் ஒன்று ஹோலி பண்டிகையோடு வருகிறது. ஆகவே, இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி அவர்கள் மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம் என முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    அவர்கள் எப்போதும் இரண்டு நிலைப்பாடு கொண்டுள்ளனர். கலர் பொடி விற்பனை செய்வதற்கான கடைகள் அமைத்து அதன் மூலம் வருவமானம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களின் ஆடைகளில் சில கறைகள் படிந்தால், அவர்கள் நரகம் (dozakh) என பயப்படத் தொடங்குவார்கள்.

    இவ்வாறு ஹரிபூஷன் தாகூர் பசாயுல் தெரிவித்தார்.

    ஹரிபூஷன் தாகூர் பசாயுல் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்படடு வருகின்றன.

    ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான இஸ்ரெய்ல் மன்சூரி கூறுகையில் "பண்டிகைகள் வரும்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய இஃப்தார் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். ஹோலி பண்டிகையில் முஸ்லிம் பற்றி பாஜக எம்.எல்.ஏ. கவலைப்படுவது ஏன். இந்த மக்கள் அரசியல் பிரச்சனைக்காக வகுப்புவாத பிரச்சனையை தூண்டிவிட்டு, சனாதனத்தின் கொடி ஏந்தியவர்கள் போல் நடிக்கிறார்கள்" என்றார்.

    எனினும் மாநில மைானரிட்டி விவகாரத்துறை மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான ஜமா கான் கூறுகையில் "எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாது. பண்டிகைக் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    ×