search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்
    X

    கேரளாவில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

    • சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர்.

    திருச்சூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கட்டிலப்பூவம், மடக்கத்தாரா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து இறந்தன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சுகாதாரத் துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதித்து பன்றிகள் இறந்தது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து நோய் பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஒரே நாளில் 310 பன்றிகளை கொன்று புதைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதி தொற்று மண்டலமாகவும், 10 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விற்பனை, பன்றி இறைச்சி கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×