என் மலர்
இந்தியா

தபால் ஓட்டு வயது வரம்பு 85 ஆக உயர்வு
- கடந்த தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.
- தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சட்டமன்ற தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
இந்த நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.
தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் 2-3% பேர் மட்டுமே தபால் ஓட்டு அளிக்கும் வசதியை பயன்படுத்தி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.






