search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க முடியாது- சித்தராமையா திட்டவட்டம்
    X

    ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க முடியாது- சித்தராமையா திட்டவட்டம்

    • காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

    காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11,500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருந்தது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட பிரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் கர்நாடக முடிவு செய்துள்ளது.

    மேலும், தினசரி 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒரு டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×