search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஆந்திரா: பன்னி திருவிழாவில் சண்டையிட்டு கொள்ளும் சடங்கில் 70 பேர் காயம்
    X

    ஆந்திரா: பன்னி திருவிழாவில் சண்டையிட்டு கொள்ளும் சடங்கில் 70 பேர் காயம்

    • ஆந்திராவில் தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
    • போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது.

    ஆந்திராவின் கர்னூல் அருகே தேவரக்கட்டு பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் பன்னி திருவிழாவின் முக்கிய அம்சமான சண்டையிடும் சடங்கில், இந்தாண்டு 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. தேவரகட்டு மலையில் மலைமல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. வழக்கம் போல் தசரா தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு மாளம்மா, மல்லேஸ்வர சுவாமிக்கு கல்யாணம் நடந்தது. அதன்பின், மலையின் சுற்றுவட்டாரப் பகுதியில் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. இந்த உற்சவ சிலைகளை பெறுவதற்காக 5 கிராம மக்கள் ஒரு குழுவாகவும், மற்ற 3 கிராம மக்கள் மற்றொரு குழுவாகவும் சேர்ந்து சண்டையிடுவர்.

    பல கிராமத்தினர் குழுவாக பிரிந்து சண்டையிட்டு கொள்ளும் இந்த சடங்கை பாதுகாப்பாக நடத்துவதற்கு 800 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே நடந்த அதிகார மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×