search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணி கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: ஆம் ஆத்மி
    X

    இந்தியா கூட்டணி கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: ஆம் ஆத்மி

    • அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளன.
    • மூன்று நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து ஜாமின் கேட்டு போராடி வந்த நிலையில் ஜாமின் கிடைப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இந்த நிலையில் சிபிஐ கைது செய்துள்ளது.

    தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவேன். ஏற்கனவே உத்தவ் தாக்கரேயிடம் பேசியுள்ளேன். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவேன். பாஜக விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது தொடர்பாக குரல் எழுப்ப வேண்டுகோள் விடுக்கப்படும்.

    மாநிலத்தை பொறுத்த வரையில் எங்களுக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துதல் போன்ற தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக எதிராக கட்சிகள்" என்றார்.

    Next Story
    ×