search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட தினம்: தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டம், உளவு அமைப்புகள் எச்சரிக்கை
    X

    370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட தினம்: தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டம், உளவு அமைப்புகள் எச்சரிக்கை

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்.
    • காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் 370-வது சட்டப் பிரிவு அமலில் இருந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் அனுபவித்து வந்த சிறப்பு சட்ட சலுகைகள் பறிபோனது. இதற்கு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    370-வது சட்டப்பிரிவை நீக்கியதோடு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு என்று யூனியன் பிரேதசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து தீவிரவாதிகளின் பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதை ஒடுக்குவதற்காக மத்திய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கிடையே காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட 5-வது ஆண்டு தினமான இன்று (திங்கட்கிழமை) காஷ்மீரிலும் பஞ்சாப் மாநிலத்திலும் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படை சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    காஷ்மீர் எல்லையில் உள்ள தீவிரவாதிகள் அவர்களது இந்திய ஆதர வாளர்களுடன் தொலைபேசியில் பேசியதை ஒட்டு கேட்டு உளவுப்படை இதை உறுதிப்படுத்தி உள்ளது.

    சர்வதேச உளவு அமைப்புகளும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக் கான சதி திட்டம் நடந்து வருவதாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் இரு மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

    காஷ்மீரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பும், சோதனை யும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்காத வகையில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

    Next Story
    ×