search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமி பாலியல் வன்கொடுமை: கிரைம் சீனுக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்- குளத்தில் குதித்து உயிரிழந்த குற்றவாளி
    X

    சிறுமி பாலியல் வன்கொடுமை: கிரைம் சீனுக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்- குளத்தில் குதித்து உயிரிழந்த குற்றவாளி

    • 14 வயது மாணவி கோச்சிங் கிளாஸ் சென்று திரும்பியபோது கடத்தி வன்கொடுமை.
    • மூன்று குற்றவாளிகள் ஈடுபட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட செய்தி இந்தியாவையே உலுக்கியது. இந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பெண் டாக்டர்கள் இரண்டு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பியுள்ளனர்.

    இதற்கு அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பும்போது மூன்று பேர் வழிமறித்து மறைவான இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தஃபுஜல் இஸ்லாம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இருவரை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போலீசார் கிரைம் சீனுக்காக (குற்றம் நடந்தது எப்படி என குற்றவாளியை நடித்துக்காட்டிச் சொல்லி போலீசார் வீடியோ ஆதாரம் எடுப்பது) குற்றம் நடைபெற்ற இடத்திற்கு தஃபுஜல் இஸ்லாமை அழைத்துச் சென்றனர்.

    அப்போது போலீசார் பிடியில் இருந்து தஃபுஜல் இஸ்லாம் தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை விரட்டிச் செல்லும்போது அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது போலீஸ் ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

    தஃபுஜல் இஸ்லாம் உயிரழிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். எங்கள் கூட்டு மனசாட்சியைத் தாக்கியுள்ளது. நாங்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் மற்றும் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்வோம். விரைவான நடவடிக்கையை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×