search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா மீதான உலக நாடுகளின் தவறான எண்ணத்தை மாற்றியவர் காந்தி: பசவராஜ் பொம்மை
    X

    இந்தியா மீதான உலக நாடுகளின் தவறான எண்ணத்தை மாற்றியவர் காந்தி: பசவராஜ் பொம்மை

    • மகாத்மா காந்தியின் மூளையும், இதயமும் ஒன்றே.
    • தனது இதயம் என்ன சொன்னதோ அதன்படி அவர் செயல்பட்டார்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் 'காந்தி ஸ்மாரன்-காந்தி நமன்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாம் மகாத்மா காந்தியை நினைவு கூறுவதே அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை ஆகும். மகாத்மா காந்தியின் மூளையும், இதயமும் ஒன்றே. தனது இதயம் என்ன சொன்னதோ அதன்படி அவர் செயல்பட்டார். இந்த விஷயங்கள் தான் காந்தியின் வாழ்க்கையாக இருந்தது. அஹிம்சையை பின்பற்றும்படி உறுதியாக கூறினார். இறுதி வரை அதையே அவர் பின்பற்றினார். காந்தி அனைத்தையும் சமமாக எடுத்து கொண்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தனது செயல்கள் மூலம் இந்தியா மீது உலக நாடுகளுக்கு இருந்த தவறான எண்ணத்தை மாற்றியவர் காந்தி. அதுவரை நமது நாடு மீது வேறு ஒரு எண்ணம் அந்த நாடுகளுக்கு இருந்தது. அதன் பிறகு உலக நாடுகள் இந்தியாவுக்கு மரியாதை வழங்கின. சீர்திருத்தம், தவறுகள், தவறுகளை அதை சரி செய்து கொண்டது, அவமானம், வெற்றி என அனைத்தும் உள்ளடக்கியது தான் காந்தியின் வாழ்க்கை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    Next Story
    ×