search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: 60 முதல் 70 இடங்களில் போட்டியிட பா.ஜ.க. திட்டம்
    X

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: 60 முதல் 70 இடங்களில் போட்டியிட பா.ஜ.க. திட்டம்

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி.
    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்க திட்டம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் முன்னணி மாநில கட்சிகளாக உள்ளன.

    90 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டன. மெகபூபா முக்தி இந்த கூட்டணியில் இணைவாரா? எனத் தெரியவில்லை. பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி கட்சியிடன் தேர்தலுக்கு முந்தைய அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற கருத்தை புறந்தள்ளிவிடவில்லை.

    இதற்கிடையே பாஜக 60 முதல் 70 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமித் ஷா, ஜே.பி. நட்டா உளளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின்போது மக்களுக்கு மிகவும் அறிமுகமான பிரபலமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதால் தனித்து களம் இறங்கிய பாஜக தீர்மானித்துள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

    மேலும், சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வலுவான சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்த பின் பாஜக ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து. முஃப்தி முகமது சயீத் முதல்வரானார். அவர் 2016 ஜனவரி மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி முதல்வரானார்.

    2018-ல் இருந்து மெகபூபா முப்திக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. பின்னர் நவம்பர் மாதம் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×