search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Jammu and Kashmir BJP chief Ravinder Raina
    X

    ஜம்மு காஷ்மீரில் 35 இடங்களில் வென்று ஆட்சி அமைப்போம் - பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா

    • ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
    • ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக கடந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது.

    ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சட்டசபைத் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப் பட்ட பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை தோ்தல் இதுவாகும்.

    ஜம்மு-காஷ்மீா் தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவாக உள்ளது.

    அதேநேரம், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.க. வுக்கு கடந்த முறையைவிட (25) சற்று அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.டி.பி.-க்கு சொற்ப இடங்களே கிடைக்கும் என்றாலும், ஆட்சி அமைப்பதில் அக்கட்சி துருப்புச் சீட்டாக மாறக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    அதுபோல துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் 5 நியமன எம்.எல்.ஏ.க்களின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நாங்கள் 35 இடங்களில் வெற்றி பெறுவோம். சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் எப்படியும் 15 இடங்களை வெல்வார்கள். அவர்களிடம் கூட்டணி அமைத்து நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்திக்கும். பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×