search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலியை ஸ்பேனரால் அடித்தே கொன்ற காதலன்- நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி
    X

    காதலியை ஸ்பேனரால் அடித்தே கொன்ற காதலன்- நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

    • ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
    • தடுக்க வந்தவரை தள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார்.

    மகாராஷ்ர மாநிலம் மும்பை அருகே வசாயின் கிழக்கு பகுதியில் பரபரப்பான சாலையில் 28 வயது உள்ள ரோஹித் தனது முன்னாள் காதலி ஆர்த்தி ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் யாதவ், தனது முன்னாள் ஆர்த்தி யாதவ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து, ஸ்பேனருடன் அவரைத் துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் சாலையின் நடுவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சிசிடிவி காட்சிகளின்படி, ரோஹித் ஆர்த்தியை ஸ்பேனரால் துரத்துவதும், அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை அடிப்பதும் போல் உள்ளது. அந்த வீடியோவில் ஆர்த்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்போது ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.

    தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ரோஹித்தை தடுக்க முயன்றார். இருப்பினும், தடுக்க வந்தவரைதள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார். இதை அடுத்து அந்த நபர் பின்வாங்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து யாரும் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை.


    இந்த கொடிய சம்பவத்தை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அதில் ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்... ஏன் அப்படி செய்தாய்?' என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான்.

    இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆறு வருட நீண்ட உறவைத் தொடர்ந்து அவர்கள் பிரிந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது.

    வசாயின் கிழக்கு சின்ச்பாடா பகுதியில் அதிகாலையில் ஆர்த்தி யாதவ் வேலைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×