search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் - நிர்மலா சீதாராமன்
    X

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் - நிர்மலா சீதாராமன்

    • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
    • சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (ஜூலை 23) காலை துவங்கியது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அவரது உரையில்,

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும். ஆந்திராவிற்கு சிறப்பு நிதி உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்கப்பட உள்ளது. பீகாருக்கு சிறப்பு நிதியாக ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுககு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

    நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    மாநில அரசு வங்கிகளோடு இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் துவங்கப்படுகிறது. மாநில அரசுகளோடு இணைந்து பல்வேறு நகரங்களை வளர்ச்சி மையமாக அரசு மேம்படுத்தும்.

    திவாலான நிதி நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும். பிரதமரின் நகர்ப்புற வூட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகளின் வீடு தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கூடுதலாக சிறிய வகை அணுமின் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×