search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டர் கொலை வழக்கு: மருத்துவமனை முன்னாள் டீன் கைது
    X

    பெண் டாக்டர் கொலை வழக்கு: மருத்துவமனை முன்னாள் டீன் கைது

    • மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் என்பவரை சி.பி.ஐ. கைது செய்தது.
    • மேலும் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    கொல்கத்தா:

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் சந்தீப் கோஷ், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உள்பட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலரை சி.பி.ஐ. இன்று கைது செய்தது.

    இவர்கள்மீது ஆதாரங்களை அழித்தல், மோசடி ஆவணங்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×