என் மலர்
மேற்கு வங்காளம்
- ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
- இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

"இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்," என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
- ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
- நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
- ஏப்ரல் 6-ந்தேதி ராம நவமி பேரணி நடத்தப்படும்.
- ஒரு கோடி மக்கள் பேரணியில் கலந்து கொள்வார்கள்.
மேற்கு வங்கத்தில் ஒரு கோடி இந்துக்கள் பங்கேற்கும 2 ஆயிரம் ராம நவமி பேரணிகள் ஏப்ரல் 6-ந்தேதி நடத்தப்படும் என அம்மாநில பாஜக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆயிரம் ராம நவமி பேரணிகள் நடைபெற்றன. இதில் 50 ஆயிரம் இந்துக்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம், ஒரு கோடி இந்துக்கள் 2 ஆயிரம் பேரணிகளில் கலந்து கொள்வார்கள்.
இந்த பேரணிக்கு நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. கடவுள் ராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டியதில்லை. நாங்கள் அமைதி காப்போம். ஆனால், மற்றவர்களை அமைதிகாக்க வைப்பது நிர்வாகத்தின் வேலை. இந்த வருட இறுதிக்கும் தன்னுடைய தொகுதியில் சோனாசுரா என்ற இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிகாரி போன்ற பாஜக தலைவர்களின் எந்த வார்த்தை ஜாலங்களாலும் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். மத சடங்குகளை கடைபிடிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வழியில் கொண்டாடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.
- பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
- இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.
மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-
நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
- முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.
- ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான உணவு வகைகளின் செய்முறை குறிப்புகள் பகிரப்பட்டு அதிக பார்வைகளை ஈர்ப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது இணையத்தில் புதிதாக வெளியாகி உள்ள ஒரு உணவு தயாரிப்பு வீடியோ சமூக வலைத்தளவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.
கொல்கத்தாவில் சாலையோர உணவகத்தில் தயாரிக்கப்பட்ட புதுவித ஆம்லெட் தொடர்பான வீடியோவே அதற்கு காரணம். அந்த வீடியோவில் சமையல் கலைஞர் சூடான தோசைக்கல்லில் முட்டைகள் உடைத்து ஊற்றுகிறார்.
பார்வையாளர்கள் ஏதோ சாதாரண ஆம்லெட் தயாரிப்பு வீடியோதான் என நினைப்பதற்குள் தனது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துகிறார். அதாவது முட்டை கலவை வெந்து வரும் நேரத்தில் ஒரு பாக்கெட் முழுவதும் உள்ள கிரீம் பிஸ்கெட்டுகளை அதிலே கொட்டுகிறார். முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.
பின்னர் வெந்த அந்த 'கிரீம் பிஸ்கெட்' ஆம்லெட்டை தனது ரசனைக்கேற்ப அலங்கரித்து வாடிக்கையாளர்களிடம் வழங்குகிறார். இந்த ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
- சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.
- ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. கட்சி தாவியதாக பாஜக-வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நெருங்கிய உதவியாளரான ஹல்தியா தொகுதி பெண் எம்.எல்.ஏ. தபாசி மொண்டல் பாஜக-வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார்.
மொண்டலின் முடிவு, சுவேந்து அதிகாரியின் கோட்டையான ஹல்தியா நகர் அமைந்துள்ள புர்பா மெதினிபூர் பாஜக அமைப்புக்கு மட்டுமல்ல, அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சிக்கும் இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகததில் மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் முன்னிலையில் தபாசி மொண்டல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
முதலமைச்சரின் வளர்ச்சி முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க முடிவு செய்துள்ளேன் என தபாசி மொண்டல் தெரிவித்துள்ளார்.
2016-ல் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு ஹல்தியா தொகுதியில் வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி விலகி 2021 தேர்தலின்போது பாஜக-வில் இணைந்தபோது, இவரும் பாஜக கட்சியில் இணைந்தார்.
- நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை.
- இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பிரதமர் மோடியை சந்தித்து அவரிடம் நியாயம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், "நான் பிரதமர் மோடியை சந்தித்து, இந்த விவகாரத்தில் அவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரிடம் கூற விரும்புகிறேன்."
"எங்கள் மகள் பெரிய கனவு கொண்டிருந்தாள். அவளுக்கு இப்படியொரு மரணம் ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் எங்களை விட்டுச் சென்று ஏழு மாதங்கள் கழிந்துவிட்டது, ஆனால் நீதி எங்கே? எங்களிடம் அவளின் இறப்பு சான்றிதழ் கூட இல்லை. பெண் மருத்துவருக்கு அவர் பணியாற்றும் இடத்திலேயே பாதுகாப்பு இல்லையெனில், வேறு எங்கு தான் பாதுகாப்பு இருக்கும்?," என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயர் கூறிய கருத்துக்கள் குறித்து பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால், "பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நமது பிரதமர் அவர்களுக்கு (பெற்றோருக்கு) நேரம் கொடுத்து, அவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்பார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில நிதித்துறை அமைச்சர் சந்திர்மா பட்டாச்சார்யா கூறும் போது, "நாட்டின் எந்த குடிமகனுக்கும் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு அவரை சந்திக்கும் உரிமை உள்ளது. ஆனால், நமது தலைவர் மம்தா பானர்ஜி தான் இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்து முதல் நடவடிக்கையை எடுத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது," என்று தெரிவித்தார்.
- வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர்.
- இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தலை ஆணையம் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} வழங்கியுள்ளது.
ஆனால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் ஒரே எபிக் நம்பர் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியானது. உதாரணத்திற்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு வாக்களரின் அடையாள எண்ணும், கர்நாடக மாநிலத்தில் உள்ள வாக்காளரின் அடையாள எண்ணும் ஒரே மாதிரியாக இருக்கும். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடைசியாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சகேத் கோகலே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாகேத் கோகலே கூறியிருப்பதாவது:-
ஒரே எண் கொண்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பலருக்கு வழங்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் இறுதியாக ஏற்றுக்கொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் பொய்யை வெளிக்கொண்டு வந்து அதன் ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.
முதலில் மறுப்பு தெரிவித்த ஆணையம், தற்போது அதை 3 மாதங்களில் சரி செய்வதாக தெரிவித்துள்ளது. ரிஜிஸ்டர் அதிகாரிகள் தவறான சீரிஸ் எண்களை பயன்படுத்தியதால் கடந்த 2000-த்தில் இருந்து இது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம்.
தேர்தல் ஆணையம் எதை மறைக்கிறது? யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறது? இது ஒரு மோசடி. பதில்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
- நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன.
- என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.
மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ளார். இவர் பா.ஜ.க.-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பாஜக-வில் இணைய இருப்பதாக சில செய்திகள் பரவி வருகின்றன. நான் ஒருபோதும் பாஜக முன் தலைவணங்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கழுத்தை அறுத்தாலும் கூட, எனது மூச்சு நிற்கும் வரை மம்தா பானர்ஜி ஜிந்தாபாத் முழக்கம்தான் வாயில் இருந்து வரும்.
இந்த நேரம் வரை நீங்கள் எங்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்) இருக்கும் வரை பாஜக-வின் சக்ரவியூகத்தை தொடர்ந்து உடைத்தெறிவோம். கட்சிக்கு எதிராக யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளோம்.
கட்சிக்கு எதிராக முகுல் ராய் மற்றும் சுவேந்து அதிகாரி செயல்பட்டதை நான்தான் அடையாளம் கண்டேன்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த கொண்டுவந்ததாகவும் கூறினர்.
- சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் குமார்துலி காட் அருகே இரண்டு பெண்கள் வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி சூட்கேசில் வைத்துக் கொண்டுபோய் கங்கை நீரில் போட முயன்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்துள்ளது. பையுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் குமார்துலி காட் கங்கை கரையில் நீல நிற டிராலி சூட்கேஸுடன் நின்றிருந்த பெண்களை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்துள்ளனர்.
தங்கள் வீட்டு நாய் இறந்துவிட்டதாகவும் அதை அப்புறப்படுத்த இங்கு கொண்டுவந்ததாகவும் அப்பெண்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்த டிராலி பையைத் திறந்து பார்த்த மக்கள், உள்ளே இருந்த தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டப்ப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு அப்பெண்களைக் கைது செய்தனர். அதன்பின் அவர்களிடம் நடந்த விசாரணையில் இரு பெண்கள், ஃபால்குனி கோஷ் மற்றும் அவரது தாயார் ஆர்த்தி கோஷ் என்று தெரியவந்தது. சூட்கேசில் இருந்த பெண்ணின் உடல், ஃபால்குனி கோஷின் மாமனாரின் சகோதரி சுமிதா கோஷ் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த சுமிதா, தனது கணவரிடமிருந்து பிரிந்து, பிப்ரவரி 11 முதல் கொல்கத்தாவில் உள்ள ஃபால்குனி மற்றும் ஆர்த்தி கோஷ் இருவருடனும் வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஃபால்குனி தனது கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார்.
நேற்று மாலை ஃபால்குனி, சுமிதா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஃபால்குனி சுமிதாவை சுவரில் தள்ளியதில் மயக்கமடைந்தார்.
அவர் சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதன் போது, ஃபால்குனி சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தாயும் மக்களும் பராசத் காஜிபாராவிலிருந்து சீல்டாவுக்கு சூட்கேஸுடன் ரெயிலில் பயணம் செய்து அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து உடலை குமார்துலி காட் கங்கை நீரில் அப்புறப்படுத்த முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏற்பட்டது பற்றி எந்த தகவலும் இல்லை.
- நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
வங்காள விரிகுடாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இன்று காலை 6.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர். எனினும், இதன் காரணமாக சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நிலநடுக்கம் பற்றி பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒருவர், "அதிகாலையில் கொல்கத்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. விழித்திருந்ததால், உணர்ந்தேன்," என பதிவிட்டுள்ளார்.