search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹேமந்த் சோரனுடன் விரிசல்.. புதிய கட்சி தொடங்கும் சம்பாய் சோரன் - யாருடன் கூட்டணி?
    X

    ஹேமந்த் சோரனுடன் விரிசல்.. புதிய கட்சி தொடங்கும் சம்பாய் சோரன் - யாருடன் கூட்டணி?

    • சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
    • 'ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள்'

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முக்கியத் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதால் சம்பாய் சோரன் முதல் மந்திரியாகப் பதவி ஏற்றார். அவர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியாக இருந்தார்.

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சம்பாய் சோரன் பா.ஜ.க.வில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. மேலும் சம்பாய் சோரனின் திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் தான் சொந்த வேலையாகவே டெல்லி வந்துள்ளதாகச் சம்பாய் சோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    மேலும் அவரது எக்ஸ் பதிவில், கட்சித் தலைமை தன்னை அவமதித்து விட்டது.எனது பதவிக்காலத்தில் கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தேன். ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதைவிட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்கமுடியுமா?தனது கட்சி தன்னை அவமதித்து விட்டதாகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் என் முன் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் புது கட்சி தொடங்கும் முடிவை சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ஜார்கண்ட் திரும்பியுள்ள சம்பாய் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இனி புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. நான் அரசியலிலிருந்து ஒருபோதும் விலகப் போவது இல்லை. என்னுடைய ஆதரவாளர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடனான எனது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக ஒன்றை [அரசியல் கட்சியை] நான் தொடங்க உள்ளேன்' என்று தெரிவித்தார்.

    ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சி தொடங்க நிறைய நேரம் இல்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சம்பாய் சோரன், அது உங்களின் பிரச்சனை இல்லை, ஒரே நாளில் 30,000, முதல் 40,000 பேர் வரை கூட திரண்டு வருவார்கள், அப்படி இருக்கும்போது புதிதாக [கட்சி] தொடங்குவதில் எனக்கு என்ன பிரச்சனை.

    ஒரே வாரத்துக்குள் ஒரே வாரத்துக்குள் புதிய அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் புதிய கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நான் ஈடுபடுவேன். இந்த பயணத்தில் பயணத்தில் புதிய நண்பர்கள் கிடைத்தால் [கூட்டணி] அவர்களுடன் இணையவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×