search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
    X

    எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
    • விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், ஜன சேனா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ளது.

    இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்டது.

    மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இணைய உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எம்.பி.க்களுடன் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்த உள்ளார்.

    மத்திய அமைச்சரவையில் சபாநாயகர், 2 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகளை கேட்டு பெறுவது குறித்து எம்.பி.க்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×