search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    அன்று  பாபர் மசூதி  சிதைந்ததை போல இன்று காங்கிரஸ் சிதைந்துவிட்டது - யோகி ஆதித்யநாத்
    X

    அன்று பாபர் மசூதி சிதைந்ததை போல இன்று காங்கிரஸ் சிதைந்துவிட்டது - யோகி ஆதித்யநாத்

    • ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி, பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது
    • இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன்.

    அயோத்தியில் பாபர் மசூதி சிதைந்ததை போல காங்கிரசின் கட்டமைப்பு இன்று சிதைந்விட்டது என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்றைய தினம் பிரச்சாரம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், இன்று காங்கிரசின் கட்டமைப்பு பாப்ரியை [பாபர் மசூதி] போல சிதைந்துவிட்டது. ராம பக்தர்கள் 'இன்னும் ஒரு அடி , பாப்ரியை [பாபர் மசூதியை] இடி' என்று கோஷம் எழுப்பியபோது மசூதி மொத்தமாக தகர்ந்தது. அடிமைத்தனத்தின் கட்டுமானம் உடைந்தது. அயோத்தியில் ராமர் கோவிலை எழுப்புவதற்கான பாதை வகுக்கப்பட்டது. இதை சொல்லவே இன்று நான் உங்கள் முன் [அரியானா மக்கள் முன்] வந்துள்ளேன். அவர்கள்[காங்கிரஸ்] சாதி அரசியல் மூலம் உங்களை பிரிக்கின்றனர்.

    நான் சொல்வதெல்லாம் இதுதான், பிரிந்து கிடந்தால் தனித்தனியாக இருப்பீர்கள், ஒற்றுமையாக இருந்தால் எந்த தாய்க்கு பிறந்தவனாலும் உங்களின் தலை முடியைக் கூட அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இந்து விஷ்வ பரிஷத் உள்ளிட்ட தீவிர வலதுசாரி இந்துத்துவ இயக்கத்தினரால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் ரூ.1800 கோடி செலவில் பாஜக அரசின் முன்னெடுப்பினால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×