என் மலர்tooltip icon

    அரியானா

    • உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
    • அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

    இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

     

    நிர்மல் யாதவ்

    அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்
    • என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று வினேஷ் போகத்திடம் கேட்க அரசாங்கம் முடிவு

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கா தேர்வானார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' வேலை ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

    ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு பேசிய பேசிய நயாப் சிங் சைனி , "வினேஷ் போகட் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனறு தெரிவித்தார்.

    • விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
    • அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    அரியானா மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை உயிருடன் புதைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் தன் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இப்படி செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே வசித்து வருபவர் ஹர்தீப். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். இந்த வீட்டில் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவர் அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    வாடகைக்கு குடியேறிய அவர் ஹர்தீப் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் மனைவியுடன் யோகா ஆசிரியர் ஜக்தீப் தனிமையில் சந்தித்ததை ஹர்தீப் கண்டுபிடித்தார். தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்தவர் மனைவியுடன் கள்ளக்காதலை ஏற்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து, யோகா ஆசிரியர் ஜக்தீப்பை தீர்த்தக்கட்ட ஹர்தீப் முடிவு செய்தார். இந்த கொலையில் தான் சிக்கிவிடக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருக்க நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பருடன் தீவிர ஆலோசனை நடத்தி சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் திட்டம் தீட்டினார்.

    அதன்படி ஹர்தீப் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து கொண்டு யோகா ஆசிரியர் ஜக்தீப்பை உயிரோடு குழி தோண்டி புதைக்க முடிவு செய்தார். அதற்காக விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப் போவதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி தயார் நிலையில் வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி ஜக்தீப் வேலைக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திச் சென்று, ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த 7 அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். தொடர்ந்து அவரை உயிரோடு புதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் ஹர்தீப் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார். இந்த நிலையில் யோகா ஆசிரியர் ஜக்தீப்பின் உறவினர்கள் அவரை காணவில்லை என கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி சிவாஜி காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் அழைப்பு பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    சந்தேகத்தின் பேரில் ஹர்தீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் யோகா ஆசிரியரை கை கால்களை கட்டி உயிரோடு புதைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த போலீசார் நேற்று முன்தினம் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஹர்தீப் மற்றும் அவருடைய நண்பர் தரம் பால் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.

    • தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
    • விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.

    அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி பூரா. குத்துச்சண்டை வீராங்கனை. இவரது கணவர் தீபக் ஹூடா. கபடி வீரர்.

    தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.

    மேலும் ஹிகார் போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.


    போலீஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்தார். தனது கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

    இதில் ஸ்வீட்டியின் கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனைக் கண்டு திகைத்துப் போன போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.

    ஸ்வீட்டி தாக்கியதில் அவருடைய கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. ஸ்வீட்டி தனது கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
    • உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின

    அரியானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 10 நகராட்சிகளில் ஒன்பது மாநகராட்சிகளை பாஜக வென்றுள்ளது.

    மீதமுள்ள ஒரு இடமான மானேசரில் பாஜகவில் இருந்து விலகிய அதிருப்தி தலைவர் இந்திரஜித் யாதவ் வெற்றி  பெற்றார்.

    குருகிராம், பரிதாபாத், ரோஹ்தக், ஹிசார் மற்றும் மூன்று நகராட்சிகள்  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும், மார்ச் 9 ஆம் தேதி பானிபட் நகராட்சிக்கு தனி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இவை தவிர, அம்பாலா மற்றும் சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல்களும், 21 நகராட்சி குழுக்களின் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் மார்ச் 2 ஆம் தேதி அன்றே நடத்தப்பட்டன.

    இதில் பதிவான வாக்குகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டன. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றதால், கட்சித் தலைவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

    காங்கிரஸ் எங்கும் வலுவான போட்டியை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மறுபுறம், 26 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்டது.
    • தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

    அரியானாவில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குளாகி உள்ளது.

    அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம், பஞ்சகுலாவில் உள்ள மோர்னியின் பால்ட்வாலா கிராமத்திற்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விபத்துக்குள்ளானது.

    விமானி ஒரு பாராசூட் துணைகொண்டு தரையிறங்கி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

    இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான்.
    • சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார்.

    அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது சிறுமி தனது பாட்டியின் வங்கிக்கணக்கில் நெட் பேங்கிங் பயன்படுத்தி வந்துள்ளார். பாட்டியின் கணக்கில் நிறைய பணம் இருந்துள்ளது. பாட்டியின் கணக்கை பயன்படுத்துவது பற்றி சிறுமி தனது பள்ளித் தோழர்களிடம் கூறியுள்ளார்.

    அவர்களின் ஒரு மாணவன் இதை தனது மூத்த சகோதரனிடம் கூறியுள்ளான். அந்த சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளான். சிறுமியின் சமூக வலைதள கணக்கை அறிந்து அவருடன் நட்பாக அந்த இளைஞன் பழகியுள்ளான்.

    சிறுமியின் புகைப்படத்தை வாங்கி அதை மார்பிங் செய்து சிறுமியை மிரட்டி பணம் பறிக்கத்தொடங்கியுள்ளான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த மோசடி தொடங்கி சுமார் 8 மாத காலங்களாக நடந்து வந்திருக்கிறது.

    இளைஞன் கேட்ட போதல்லாம் சிறுமி ரூ.1000 முதல் ரூ.1 லட்சம் வரை தனது பாட்டியின் கணக்கிலிருந்து தனது செல்போன் நெட் பேங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளாள். இவ்வாறு சுமார் ரூ.50 லட்சம் வரை சிறுமியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கட்டத்தில் பாட்டியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் போகவே, சிறுமி படித்து வந்த டியூசன் சென்டருக்கு சென்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளார். இதை கண்ட டியூசன் டீச்சர் சிறுமியிடம் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது.

    சிறுமியின் குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில் விசாரணை தொடங்கியதிலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    முக்கிய குற்றவாளி நவீன் (28) நேற்று கைது செய்யப்பட்டான். நவீனிடமிருந்து ரூ.5 லட்சத்தையும், ஒரு டெபிட் கார்டையும் போலீசார் மீட்டனர். நவீன் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

    சிறுமியிடம் மோசடியாகப் பெறப்பட்ட தொகையில் இதுவரை ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தனர்.
    • மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை ரோதக்கில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்க அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.

    இந்த நிலையில் நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    ரோதக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்த நர்வால் அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்து கட்சி தலைவர்கள் சிலர் பொறாமைப்படுவதாக நர்வாலின் தாயார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய நர்வாலின் தாயார் சவிதா, "கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக இருப்பேன் என்று அவள் கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்," என்று அவர் கூறினார்.

    அரியானா காங்கிரஸ் தலைவர்கள் நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கட்சி பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர். அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ‘ஆன்-லைன்’ மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
    • பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குருகிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.

    அதன்படி 'ஆன்-லைன்' மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை 'கேஷ்-ஆன் டெலிவரி' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு வினியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றனர். அங்கிருந்த பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், காதலர் தினத்தன்று இப்படி ஒரு பரிசை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர், காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டனர்.

    • அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
    • இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை என அரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது:-

    ஒரு நபர் மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்றால், பின்னர் அந்த நாடு அவரை வெளியேற்ற எல்லா உரிமையையும் பெற்றுள்ளது. டிரம்ப் எந்த தவறும் செய்யவில்லை. இதில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன்.

    லட்சக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக உள்ளனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலோ பிறந்தவர்கள். ஆனால் நாம் அவர்களுக்கு உணவு அளிக்கிறோம். அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அனில் விஜ் தெரிவித்தார்.

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர். இதில் தலா 33 பேர் குஜராத் மற்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தலா 3 பேர் மகராஷ்டிரா, உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சண்டிகரை சேர்ந்தவர்கள்.

    இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி, அவருடைய நண்பரான டொனால்டு டிரம்ப் உடன் இது தொடர்பாக பேச வேண்டும் என பஞ்சாப் மாநில அமை்சர் தலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    • ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
    • செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று ஆதங்கம்.

    அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனத சகோதரியின் செல்போன் திருடப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர்.

    "ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்?" என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.

    "நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அதிகாரி பதிலளித்தார்" என்றார்.

    பின்னர், "அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார்.

    திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமூகமான ஒருங்கிணைப்பு இருந்தது, இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது," என்று காபா கூறினார்.

    • யமுனை நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசுமீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
    • இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது.

    சண்டிகர்:

    டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக அரியானா அரசு மீது கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், யமுனை நதியில் விஷம் கலக்க முயற்சி எனக்கூறிய கருத்து தொடர்பாக, அரியானா அரசு கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி சோனிபேட் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட விதிகளின்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×