என் மலர்
இந்தியா
போலீசைவிட திருடர்கள் எவ்வளவோ மேல்..! செல்போன் திருட்டு சம்பவத்தை பகிர்ந்த இளம்பெண்
- ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
- செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று ஆதங்கம்.
அரியானா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது சகோதரியின் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசை அணுகியதைவிட திருடர்கள் எவ்வளவோ மேல் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹிமான்ஷி காபா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், " நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனத சகோதரியின் செல்போன் திருடப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம். ஆனால், போலீசார் செல்போன் எடுத்தவனை டிராக் செய்யாமல், எங்களையே கேள்வி கேட்டனர்.
"ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும்? உங்கள் போனை தொலைத்தபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வருகிறீர்கள்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும்?" என்று தொடர்ச்சியாக கேள்வி கேட்டனர்.
"நாங்கள் போனைக் கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தபோது, 'அப்படியானால் நீங்களே போய் அதை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று அதிகாரி பதிலளித்தார்" என்றார்.
பின்னர், "அதிர்ஷ்டவசமாக, திருடன் மிகவும் ஒத்துழைப்பு அளித்து, எங்களைத் தொடர்பு கொண்டு, சிறிது பணத்திற்கு ஈடாக தொலைபேசியைத் திருப்பித் தருவதாகக் கூறினார்.
திருடனுக்கும் எங்களுக்கும் இடையே மிகவும் சுமூகமான ஒருங்கிணைப்பு இருந்தது, இறுதியாக, எங்கள் தொலைபேசி திரும்பப் பெறப்பட்டது," என்று காபா கூறினார்.