search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Son Beats His Parents With Footwear On Srinagar
    X

    தெருவில் வைத்து பெற்றோரை செருப்பால் அடித்த கொடூர மகன் - வீடியோ

    • தாய் தந்தையை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை.
    • கடந்த 1 வருடமாக வீட்டிற்குள் விடாமல் கொடுமைப்படுத்தியதாக மகன் மீது தாய் குற்றச்சாட்டு.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுவெளியில் தனது தாய் தந்தையை மகன் ஒருவர் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    பெற்றோரை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து தாய் தாஜா பேகம் அளித்த புகாரின் பேரில் அவரது மகன் முகமது அஷ்ரப் வானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அந்த புகாரில், கடந்த 1 வருடமாக தனது வீட்டிற்குள் விடாமல் வெளியே துரத்தி கொடுமைப்படுத்தியதாக அவரது மகன் மீது தாஜா பேகம் குற்றம் சாட்டியுள்ளார்.

    Next Story
    ×