search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
    X

    சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைப்பு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

    • தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி மே 27-ந்தேதி வரை பெறப்பட்டது.
    • தேர்வு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கி ஜூன் 27-ந் தேதி வரை நடைபெற இருந்தது.

    புதுடெல்லி:

    முறைகேடு புகார் எதிரொலியாக யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர், யுஜிசியுடன் இணைந்து, வாழ்க்கை அறிவியல், வேதியியல் அறிவியல், இயற்பியல் அறிவியல், கணித அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு நெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

    தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தொடங்கி மே 27-ந்தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் 25-ந்தேதி தொடங்கி ஜூன் 27-ந் தேதி வரை நடைபெற இருந்தது.

    இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×