search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு - குடியரசு தலைவர் இரங்கல்
    X

    டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு - குடியரசு தலைவர் இரங்கல்

    • ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×