என் மலர்
இந்தியா

மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கவில்லை- தர்மேந்திர பிரதான்
- தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
- பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மாணவர்களிடையே போட்டியை உருவாக்க, சமதளத்தை உருவாக்க, நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை தான் பொது தளம்.
* நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன்.
* தேசிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒரு மாணவன் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
* பிரதமர் மோடியின் தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
* நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு?
* அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளாக இருக்கலாம். அவர்கள் மீது இந்தி அல்லது வேறு எந்த மொழியும் திணிக்கப்படவில்லை.
* மும்மொழிக்கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள்.
* யார் அரசியல் செய்தாலும் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார்.






